டென்ஷன் வராமல் தடுக்க
இன்றைய கால கட்டத்தில் மனிதன் பணத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் தன் உடல் நலன் மீது அக்கறை இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் ஓடுவது அவனுக்காக அல்ல. தன்னைச் சார்ந்தவர்களுக்காகத்தான். இந்த வேகத்தில் அவன் பல்லாயிரக்கணக்கான துன்பங்கள், ஏமாற்றங்கள் என அவனை சூழ்கிறது. அந்த துன்பங்களை எப்படி எளிதாக சமாளிக்கலாம் என்பதே இந்த பதிவின் நோக்கம்.
1.துன்பத்தை வரவிடுங்கள்.
துன்பம் வரும்போது அதை எதிர்கொள்ளுங்கள். அதைக் கண்டு தூர ஓடாதீர்கள். நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு பயப்படுகிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு அது உங்களை பயமுறுத்தும். இதனால் துன்பத்தை தீர்க்கும் வழியை கண்டுபிடிக்க இயலாமல் போய்விடும். துன்பம் வரும்போதும் வந்தபின்னும் மனதை அந்த துன்பத்திலிருந்து மாற்ற முயலுங்கள்.
உதாரணமாக ; உங்கள் அலுவலகத்தில் உங்கள் தலைமை அதிகாரி ஏதோ ஒரு காரணத்தால் உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டார் எனில் சிறிது நேரம் அப்படியே உட்காருங்கள். உங்களுக்கு பிடித்தமான விசயத்தை செய்யலாம். ஆன்மீக புத்தகம் படிக்கலாம் அல்லது ஒரு நிமிடம் உங்கள் மூச்சை நன்றாக இழுத்து விடலாம். இப்படி அவர்களுக்கு பிடித்த விசயத்தை செய்யலாம். பிடித்த விசயம் என்றால் மற்றவர்களுக்கு தீங்கிளைக்காமல் உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்வது.
2. ஒரு கதை
சாய்பாபாவிடம் ஒரு பக்தர் வந்தார். அவர் சாய்பாபாவிடம்! பாபா நான் மிக்க துயரத்தில் உள்ளேன் நான் எது செய்தாலும் அது எனக்கு பெறும் துயரத்தை தருகிறது. நல்லது செய்தாலும் அது தீமையில் சென்று முடிகிறது.நான் யாருக்கும் எந்த தீங்கும் இதுவரை செய்ததில்லை.எனக்கு மட்டும் ஏன் இந்தநிலை. எனக்கு தாங்கள்தான் ஒரு நல்வழிகாட்டவேண்டும் பாபா என வேண்டினார். பாபா சிறிது நேரம் கண்களை மூடி அமைதியாக இருந்தார். பின்னர் கண்களைத் திறந்து அவரைப் பார்த்து சொன்னார். முன்னொரு பிறவியில் செய்த பாவத்தின் பலனை இப்போது இந்த பிறவியில் அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் அதை இப்போதே அனுபவித்துக் கொள் இல்லையென்றால் இன்னொரு பிறவி எடுக்க வேண்டியிருக்கும் என்றார். இந்தக் கதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் நடப்பது எல்லாம் நல்லதற்க்கே என்று நினைத்தால் எந்த துயரமும் உங்களை நெருங்காது. துயரம் வாந்தாலும் அதை தாங்கிக்கொள்ளும் சக்தி உங்களிடம் பிறக்கும். வாழ்க்கையை எளிதாக வாழலாம். நன்றி.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் மிக்க நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக